×

மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெயில் வாட்டுகிறது. இக்கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்க மதிமுகவினர் நீர் மோர் பந்தல்களை அமைத்திட முன்வருமாறு வேண்டுகிறேன். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு முன் அனுமதி பெற்று, மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர், குளிர்பானம் வழங்கும் இக்கடமையினை வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பாகச் செய்திட பொதுச் செயலாளர் வைகோ சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.

The post மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,MDMK ,Chennai ,Madhyamik General Secretary ,Tamil Nadu ,Madhimuk ,Dinakaran ,
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...